Main Menu

மாற்றம் ஒன்று நிச்சயம் ஏற்படும் – ஜே.வி.பி.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் மாற்றம் ஒன்று ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அத்துடன் மக்கள் மத்தியில் எதிர்காலம் பற்றி காணப்படும் பயத்தை கோத்தாபய ராஜபக்ஷவினாலோ, ஐக்கிய தேசிய கட்சியினாலோ நீக்க முடியாது. இந்த இரு தரப்புமே பல வருடங்கள் ஆட்சியிலிருந்து என்ன செய்தார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

பகிரவும்...