Main Menu

மல்வான மாணவர் போராட்டம் பிரதமரின் கவனத்திற்கு; நாளை அவசரக் கலந்துரையாடல்

கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள, மல்வான பகுதி காணி ஒன்றில் பல நாட்களாகத் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவின் நிலைமை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரணி அமரசூரியவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ தகவல்களின் படி, இந்த விடயமும் மாணவர்களின் கோரிக்கைகளும் மிக உயர்ந்த மட்டத்தில் மீளாய்வு செய்ய எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பான சம்பந்தப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல், பிரதமர் ஹரணி அமரசூரியவின் தலைமையில் நாளை (18) பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தின் தீர்மானத்தைப் பொறுத்து, இவ்விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.