Main Menu

மறைந்த எஸ்.பி.பி.யின் ஆத்மா சாந்தியடைய தீபம் ஏற்றிய பாடகர்கள்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவாக அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் பின்னணி பாடகர்கள் சிலர் மோட்ச தீபம் ஏற்றி, பக்திப்பாடல்கள் பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

குறித்த நிகழ்வில், எஸ்.பி.பாலசுப்பிரமணியின் சகோதரியும் பின்னணி பாடகியுமான எஸ்.பி.சைலஜா, அவரது கணவர் சுபலேகா சுதாகர், பின்னணி பாடகர்கள் மனோ, அனுராதாஸ்ரீராம், நகைச்சுவை நடிகர் மயில்சாமி, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் பின்னணி பாடகர்கள், உள்ளூர் இசை கலைஞர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது  எஸ்.பி.சைலஜா, மனோ, அனுராதாஸ்ரீராம் ஆகியோர் பக்தி பாடல்கள் பாடினர். பின்னர் அவர்கள் அலயத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...