Main Menu

போலந்து நாட்டில் கருக்‍கலைப்பு உரிமைக்‍கு எதிராக தொடரும் போராட்டம்

போலந்து நாட்டில் கருக்‍கலைப்புக்‍கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததைக்‍ கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் ஆயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்று வருகின்றனர். போலந்து நாட்டில் சட்டம் மற்றும் நீதிக்‍கட்சி ஆட்சி செய்துவருகிறது.

மத அமைப்புக்‍களுடன் அதிக தொடர்பு வைத்திருக்‍கும் இக்‍கட்சி, தேசியவாத கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், கருக்‍கலைப்பு உரிமை கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்‍கில், குறிப்பிட்ட உரிமைகளுக்‍கு நீதிமன்றம் தடைவிதித்தது. இதற்கு அரசின் வலியுறுத்தலே காரணம் என புகார் எழுந்துள்ளது.

பகிரவும்...