பிரான்ஸ் நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று – நோயாளிகளை ஏற்க முடியாமல் திணறும் மருத்துவமனைகள்
பிரான்ஸ் நாட்டின் அவினான் நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் இடம் இல்லாததால், ராணுவ விமானம் மூலம் பிற நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பிரான்ஸ் நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அவினான் நகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் தொடர்ந்து புதிய நோயாளிகளை ஏற்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ராணுவ விமானம் மூலம் நோயாளிகளை அழைத்துச் செல்ல அரசு உத்தரவிட்டது.