போர்த்துகலில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!
போர்த்துகலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துகலில் ஏழு இலட்சத்து ஆயிரத்து 409பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் போர்த்துகலில் இதுவரை மொத்தமாக ஏழு இலட்சத்து 98ஆயிரத்து 74பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 17ஆயிரத்து 23பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 549பேர் பாதிக்கப்பட்டதோடு 61பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 80ஆயிரத்து 642பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 627பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது,