Main Menu

போதைப்பொருள் குற்றங்கள் அதிகரிப்பு : சட்டவிரோத குழுக்கள் புற நகரங்களிலும் இயங்குகின்றன

பிரித்தானியாவில் பல சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் போதைப்பொருள் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதேவேளை, நகரங்களின் மத்தியில் குற்றச்செயல்கள் கணிசமாகக் குறைந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் போதைப்பொருள் குற்றங்கள் 50,000 க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆனால், சராசரியாக போதைப்பொருள் குற்றங்கள் இடம்பெறும் இடங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

வன்முறைக் குற்றங்களின் உயர்வைச் சமாளிப்பதற்காக அரச சட்டத்தரணிகளுக்கு 85 மில்லியன் டொலர் மேலதிகக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு உறுதியளித்ததால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

649 பேரைக் கொண்ட சர்ரேயில் உள்ள வெஸ்தம்பிள் கிராமத்தில், போதைப்பொருள் குற்றச் செயல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளன. 9 முதல் 42 வரையான வழக்குகள் போதைப் பொருள் குற்றச் செயல்கள் தொடர்பில் பதிவாகியுள்ளன.

ஆனால் மத்திய லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் இருந்து வெறும் 20 மைல் தொலைவில் உள்ள பகுதிகளில், போதைப்பொருள் குற்றச்செயல்கள் 4,041 முதல் 1,832 வரை இதே காலகட்டத்தில் பாதியாக குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...