Main Menu

பிரித்தானியாவில் மூன்று பில்லியன் டொலர்கள் மதிப்பில் புதிய சிறைகள் அமைப்பு – பொரிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவில் புதிய சிறைச்சாலைகளை அமைப்பதற்கும், தற்போதுள்ள சிறைச்சாலைகளை புதுப்பிப்பதற்கும் 2.5 பில்லியன் பவுண்டுகள் (3 பில்லியன் டொலர்) ஒதுக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக பிரித்தானியாவில் குற்றச்செயல்கள் துரிதமாக அதிகரித்து வருகின்றன. அவற்றில் கத்திக் குத்து, ஆயுதங்களை காட்டி பணம் பறித்தல் போன்ற கொள்ளைச் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன.

2010 ஆண்டு முதல் பொலிஸ் துறைக்கான நிதி குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அரசாங்கம் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தநிலையில், குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 10 ஆயிரம் புதிய சிறைச்சாலைகளை கட்டுவதற்காகவும், பழைய சிறைச்சாலைகளை புதுப்பிக்கவும் 2.5 பில்லியன் பவுண்டுகள் (3 பில்லியன் டொலர்) ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

தற்போது உபயோகமின்றி இருக்கும் பழைய சிறைக்கட்டிடங்களை புதுப்பிப்பதும் இந்த தொகையில் அடங்கும் என அறிவித்துள்ளார்.

எதிர்வரும் மூன்று வருடங்களில் 20 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளை பணியமர்த்த உள்ளதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) டவுனிங் ஸ்ட்ரீட்டில் இடம்பெற்ற சந்திப்பொன்றில், குற்றங்களை கட்டுப்படுத்தி நாட்டில் அமைதியையும், நீதியையும் நிலை நாட்டுவது குறித்து பொலிஸ் அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

பகிரவும்...