Main Menu

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 23,065பேர் பாதிப்பு- 280பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 23ஆயிரத்து 065பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 280பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 9ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக ஒன்பது இலட்சத்து 65ஆயிரத்து 340பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 45ஆயிரத்து 955பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள 957பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பகிரவும்...