Main Menu

பிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மூன்று இலட்சத்து 181பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 16ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை 30ஆயிரத்து 706பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரான்ஸில் வைரஸ் தொற்றினால் ஏழாயிரத்து 157பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை பிரான்ஸில் ஒரு இலட்சத்து 82ஆயிரத்து 269பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 464பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை 87ஆயிரத்து 206பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...