Main Menu

பரிசில் தீயணைப்பு படையினர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்

இன்று செவ்வாய்க்கிழமை பரிஸ் தீயணைப்பு படையினர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்களது ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. பல ஆயிரக்கணக்கான வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிய முடிகிறது. சம்பள உயர்வு முக்கிய காரணமாகவும், தீயணைப்பு படையினர் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாவதை தடுக்க கோரியும், ஓய்வூதிய அதிகரிப்பை கோரியும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.  இன்று 14:00 மணிக்கு Place de la République இல் ஆரம்பிக்கும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் 18:00 மணி அளவில் Place de la Nation பகுதியை சென்றடைய உள்ளனர். குறிப்பாக SDIS தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தீயணைப்பு படை வீரர்களில் 90 வீதமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பகிரவும்...