Main Menu

இத்தாலியில் கோர விபத்து – யாழ் இளைஞன் பலி

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று முன்தினம் (13) இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் இவ் விபத்தில் பலியான ஷர்மிலன் இத்தாலிய பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளதுடன், ஒரு குழந்தையின் தந்தையுமாவார் என தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை இத்தாலி நாட்டின் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...