Main Menu

பசில் வெளியேறுவதாக தகவல் – மத்தள விமான நிலையத்தின் அதிகாரிகளும் சேவையில் இருந்து விலகத் தீர்மானம்

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளும்  சேவையில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மத்தள விமான நிலையம் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தமக்கு கிடைத்த தகவலையடுத்து, இந்தத் தீர்மானத்தை

இந்த வழியை பயன்படுத்தி முன்னாள் அரசியல் பிரமுகர்கள் நாட்டைவிட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இன்று அதிகாலை பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்கவின் ஊடாக நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோது அங்குள்ள அதிகாரிகள் தமது கடமைகளில் இருந்து விலகிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...