Day: July 12, 2022
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா (Coronavirus) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக்மேலும் படிக்க...
உள்கட்சி தேர்தல் பணிகள் முடிவடைந்ததும் தே.மு.தி.க.வில் பிரேமலதாவுக்கு புதிய பதவி?
தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் பணிகள் கடந்த 10-ந் தேதி தொடங்கி உள்ளது. வருகிற 24-ந் தேதி வரை 15 நாட்கள் முதல் கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. சேலம் கிழக்கு, மாநகர் சேலம் மேற்கு மாவட்டங்களில் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள கிளை கழங்களில்மேலும் படிக்க...
ஒருநாளேனும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பதற்கு ரணிலுக்கு இடமளிக்க வேண்டாம் – போராட்டக் காரர்களிடம் சுமந்திரன், சாணக்கியன் வலியுறுத்து
ஒருநாளேனும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பதற்கு ரணிலுக்கு இடமளிக்க வேண்டாம் என போராட்டக்காரர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் இவ்வாறு கோரிக்கைமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவின் விசா கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, தி இந்து பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இதுகுறித்து இந்தியாவுடன் பேசியுள்ளதாகவும் தகவல்கள்மேலும் படிக்க...
ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகும் நிலையை ஏற்படுத்த வேண்டும் – இரா.சாணக்கியன்
30 வருடகாலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அவர்மேலும் படிக்க...
சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- உலகின் மிகப்பெரிய சூதாட்ட விடுதிகள் மூடல்
கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பல நாடுகளுக்கும் தொற்று பரவிய நிலையில் பல நாடுகளும் பொதுமுடக்கத்தை அறிவித்தன. தற்போது தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. எனினும் உருமாறிய கொரோனா வைரசால்மேலும் படிக்க...
வேலூர் பாராளுமன்ற தொகுதியை குறி வைக்கும் பா.ஜ.க.- தேர்தல் பணிகளில் தீவிரம்
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் பெருவாரியான தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க முனைப்பு காட்டியுள்ளது. வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம் காட்டி வருகிறது. இந்த தொகுதியை குறிவைத்து பா.ஜ.க. முன்கூட்டியே தேர்தல் முன்னேற்பாடுமேலும் படிக்க...
இலவச பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளுக்காக பிங்க் நிற பஸ்கள்
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மாநகரமேலும் படிக்க...
மஹிந்த, பசில், கப்ரால் உள்ளிட்ட பலர் நாட்டை விட்டு தப்பி ஓட தடைகோரி மனுதாக்கல்
மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட பலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ தமது உத்தியோகபூர்வ கடமைகளை எங்கு செய்கின்றார்கள் என்பது பொதுமேலும் படிக்க...
பசில் வெளியேறுவதாக தகவல் – மத்தள விமான நிலையத்தின் அதிகாரிகளும் சேவையில் இருந்து விலகத் தீர்மானம்
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளும் சேவையில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மத்தள விமான நிலையம் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தமக்கு கிடைத்த தகவலையடுத்து, இந்தத் தீர்மானத்தை இந்த வழியை பயன்படுத்திமேலும் படிக்க...
அலரிமாளிகையில் இருந்த பொருட்கள் திருடப் பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு
அலரிமாளிகையில் பல்வேறு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அலரிமாளிகை ஊழியர்களே இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேநேரம், அலரிமாளிகையில் இருந்து சில உபகரணங்களும் திருடப்பட்டுள்ளதாக அலரி மாளிகையின் ஊடகப் பிரிவு முறையிட்டுள்ளது.மேலும் படிக்க...