Main Menu

நைஜீரியாவில் 7 இலங்கையர்கள் உட்பட 66 பேர் கைது!

நைஜீரியாவில் சட்டவிரோத எரிபொருள் மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இலங்கையர்கள் 7 பேர் உட்பட 66 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரிய கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 57 நைஜீரியப் பிரஜைகளும் 7 இலங்யைர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்த கைது நடவடிக்கையின் போது அந்நாட்டு கடற்படையினரால் 7 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, இவ்வாறு மேற்கொண்ட சட்டவிரோத எரிபொருள் மோசடி அதிகரித்திருந்தால் எரிபொருள் துறைக்கு மிகப்பெரிய அளவிலான பாதிப்பு மற்றும் நஷ்டம் ஏற்பட்டிருக்குமென நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...