Main Menu

நைஜீரியாவில் 68 வயதான பெண்மணிக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்தன!

நைஜீரியாவைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவர் இரட்டைக் குழந்தைகளை சிக்கலின்றி பிரசவித்துள்ளதாக லாகோஸ் பிராந்தியத்திற்கான பல்கலைக்கழக போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது.

குறித்த வைத்தியசாலையின் மருத்துவ ஆலோசனைக்குழுவின் தலைவரான பேராசிரியர் Wasiu Adeyemo இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

37 வாரங்கள் நிறைவடைந்த நிலையில், நிறைப்பிரசவமாகவே குறித்த பெண்மணி இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளதாகவும், தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...