Main Menu

நேபாளில் பஸ் விபத்து 18 பேர் உயிரிழப்பு , 13 பேர் படுகாயம்

நேபாளில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 18 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததோடு , 13 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாள நாட்டின் ஆர்காஞ்சி மாவட்டத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள  பள்ளத்திற்குள் விழுந்துள்ளது.

இதில் 18 பேர் உயிரிழந்ததோடு, 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...