Main Menu

தனியார் வங்­கியில் 33 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகைகள் கொள்ளை

வென்­னப்­புவ நகரில் அமைந்­துள்ள தனியார் வங்­கி­யொன்­றினுள் நுழைந்­த கொள்­ளை­யர்கள் வங்­கி­யி­ன் வைப்­ப­கத்தை உடைத்து அதிலிருந்த சுமார் 33 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகை­களைக் கொள்­ளை­யிட்டுச் சென்­றுள்­ள­தாக வென்­னப்­புவ பொலிஸார் தெரிவித்­தனர்.

கடந்த திங்­கட்­கி­ழமை இரவு இக்­கொள்ளைச் சம்­பவம் இடம்பெற்றுள்ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

கொள்­ளை­யர்கள் வங்­கியின் பின்­புற கதவை உடைத்துக்கொண்டு வங்கியினுள் நுழைந்­துள்­ள­தோடு வங்­கி­யி­லி­ருந்த அடகு நகைகள் வைக்­கப்­பட்­டி­ருந்த சேப்­ பினை உடைத்து அதி­லி­ருந்த தங்க நகை­களை மாத்­திரம் கொள்­ளை­யிட்டுச் சென்­றுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இக்­கொள்­ளையின் பின்னர் வங்­கியில் பொருத்­தப்­பட்­டி­ருந்­துள்ள சீசீரிவி கெம­ராவின் சில பகு­தி­களையும் திரு­டர்கள்  எடுத்துச் சென்றுள்ளமை விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­துள்­ள­தாகப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

வாடிக்­கை­யா­ளர்கள் வங்­கியில் அடகு வைத்­தி­ருந்த சுமார் 33 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகை­களே இவ்­வாறு திருடிச் செல்­லப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­தி­ருட்­டுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் இது வரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த வென்னப்புவ பொலிஸார் அவர்க ளைத் தேடிக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

பகிரவும்...