Main Menu

நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் உயிரிழப்பு!

நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெதர்லாந்தில் உள்ள zandvoort கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக வந்த பாரிய அலையில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜேர்மனியில் வசிக்கும் 57 வயதான கந்தசாமி சந்திரகுமார் என்ற இலங்கை தமிழரே இதன்போது உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக புலம்பெயர் தமிழர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...