Main Menu

மற்றுமொரு ஏவுகணையை பரிசோதனை செய்தது வடகொரியா!

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வடகொரியா ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாகவும் ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது.

குறைந்த தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றை இரண்டுமுறை வடகொரியா பரிசோதித்துள்ளதாகவும், கடந்த ஒரு வார காலத்தில் மூன்றாவது முறையாக இதுபோன்ற பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியிலுள்ள ஓரிடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த மாதம் அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவத்தினர் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்வினையாக இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதேவேளை, வடகொரியா, அமெரிக்காவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முயற்சிக்க வேண்டுமென்று பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...