Main Menu

நியூசிலாந்தில் கருக்கலைப்பு சட்ட பூர்வமாக்கும் மசோதா

நியூசிலாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்கின்ற நிலையில் கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் மருத்துவர்கள் அனுமதி வழங்கினால் மட்டும் அவர் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக அமுலில் உள்ள இந்த கடுமையான சட்டத்தை நீக்க வேண்டும் எனவும், கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாகாது என்பதை அறிவிக்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டம் நிறைவேறும் பட்சத்தில் பெண்கள் கர்ப்பம் தரித்த 20 வாரங்களுக்குள் மருத்துவரின் உதவியோடு கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  #நியூசிலாந்தில்   ,#ருக்கலைப்பு #சட்டபூர்வமாக்கப்படுகின்றது

பகிரவும்...