Main Menu

தேர்தலை தள்ளி வைத்தால் மக்கள் வீதிக்கு வருவார்கள் – எச்சரிக்கும் எதிர்க்கட்சி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புபில் மாற்றங்களை கொண்டுவந்து தேர்தலை ஒத்திவைக்கத் தீர்மானித்தால், பாரிய விளைவுகள் ஏற்படும் என எதிர்க்கட்சி கூறியுள்ளது.

அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஜனவரியில் இலட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ். எம். மரிக்கார் தெரிவித்தார்.

மக்கள் அதிகாரத்தை பொலிஸாரால் அடக்க முடியாது என்பதை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கதிற்கு வலியுறுத்த விரும்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

தோற்கடிக்கப்படும் என்று தெரிந்தும் தேர்தலை நடத்தாமல் மக்களுக்குப் பயந்து தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றது என்றும் குற்றம் சாட்டினார்.

பகிரவும்...