தென் ஆபிரிக்காவில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19 தொற்று: இதுவரை நான்கு இலட்சம் பேர் பாதிப்பு
தென்னாபிரிக்காவில் அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்தை கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நான்கு இலட்சத்து 8ஆயிரத்து 52பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிகபாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் தென்னாபிரிக்காவில், இதுவரை ஆறு ஆயிரத்து 93பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 13ஆயிரத்து 104பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 153பேர் உயிரிழந்தனர்.
மேலும், ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 699பேர் வைரஸ் தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 539பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுதவிர, இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு இலட்சத்து 36ஆயிரத்து 260பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.