Main Menu

திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது – இரா.சம்பந்தன்

தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அகிம்சைப் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில் அதில் தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் அதி உன்னதமானது என்றும் குறிப்பிட்டார்.

திலீபனின் தியாகத்தை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என்றும் தமிழர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் நின்று திலீபனை நினைவேந்த வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பகிரவும்...