Main Menu

தாயின் கல்லறை அருகே ஜோர்ஜ் புளொயிட்டின் உடல் அடக்கம்..!

அமெரிக்காவில் கொல்லப்பட்ட கறுப்பினத்தை சேர்ந்த ஜோர்ஜ் புளொயிட்டின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

உலகின் சிறுபான்மை இனங்கள் யாவுமே எதோ ஓர் வகையில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில் அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் ஜோர்ஜ் புளொயிட் உயிரிழந்தமை தற்போது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கைது மற்றும் அவரது உயிரிழப்பு குறித்து பல காணொளிகள் வெளியானதை அடுத்து பல்வேறு நாடுகளில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தையும், வன்முறையையும் தூண்டிவிட்டது.

புளொயிட்டின் மரணத்திற்கு நீதி கேட்டு நியூயோர்க் நகரில் அமைதிப் பேரணி நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கருப்பின மற்றும் வெள்ளையினத்தவரும் பங்கேற்றனர்.

இதனிடையே, ஜோர்ஜ் புளொயிட்டின் உடல் அவரது சொந்த ஊரான அமெரிக்காவின் ஹஸ்டன் நகரில் மக்கள் சூழ குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. அவரது தாயின் கல்லறை அருகே ஜோர்ஜ் புளொயிட்டின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பகிரவும்...