Main Menu

தாக்குதல் நடத்திய அதிகாரிக்கு ஆதரவாக பேரணி! – ஏற்பாட்டாளர் கைது..!

பரிஸ் காவல்துறை தலைமைச் செயலகத்தில் தாக்குதல் நடத்திய அதிகாரிக்கு ஆதரவாக பேரணி ஒன்று நடத்த ஏற்பாடாகியிருந்த நிலையில், ஏற்பாட்டாளர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  மூன்று அதிகாரிகள் உயிரிழக்க காரணமாக இருந்த இந்த தாக்குதலை நடத்திய Mickaël Harpon இற்கு ஆதரவாக இன்று வியாழக்கிழமை காலை பேரணி ஒன்று நிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்தது. சமூக ஆர்வலரான Hadama Traore இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பின்னர் <<இது இழிவான செயல். அனுமதிக்க முடியாது>> என இந்த பேரணிக்கு கண்டனம் தெரிவித்ததோடு இதற்கு தடையும் விதித்திருந்தார் உள்துறை அமைச்சர் Christophe Castaner . இந்நிலையில், நேற்று புதன்கிழமை இரவு, எவ்வித அறிவித்தலும் இன்றி ஒருங்கிணைப்பாளர் Hadama Traore காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் சமூகவலைத்தளமூடாக இவர் இந்த பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் அந்த கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பகிரவும்...