Main Menu

தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 25 ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு

நாட்டின் வடகிழக்கில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 25 ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.

மோத்ல இன்னும் தொடர்கிறது என்றும் மேலும் தலிபான்களும் பலத்த உயிரிழப்புகளை சந்தித்துள்ளனர் என்றும் தகார் மாகாண ஆளுநரின் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய தாகார் மாகாண சுகாதார இயக்குனர் அப்துல் கயூம், மாகாணத்தின் பிரதி பொலிஸ் தலைவர் உட்பட 34 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறினார்.

மேலும் இந்த தாக்குதல் குறித்து தலிபான்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...