Main Menu

சந்தைக்கு வரமுன்னரே 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை இருப்பு வைக்க முடிவு!

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சந்தைக்கு வருவதற்கு முன்பு 52 கோடி மருந்து ஊசிகளை இருப்பு வைப்பதற்கு யுனிசெஃப் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸை ஒழிக்கும் தடுப்பு மருந்து தயாரிப்பில் பல நாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பு மருந்துகள் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தடுப்பூசிகளை இருப்புவைக்கவுள்ளதாக ஐ.நா. சபையின் கீழ் செயற்படும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெஃப் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

வரும் 2021 ஆம் ஆண்டுக்குள் 100 கோடி ஊசிகளை தயார் நிலையில் வைக்கவும் முதற்கட்டமாக 52 கோடி ஊசிகளை இருப்பு வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் முடிந்து, மனிதர்களுக்குச் செலுத்துவதற்கான அனுமதி கிடைத்தவுடன் ஊசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...