Main Menu

‘தர்பார்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

லைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும்  ‘தர்பார்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதேநேரம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் பொலிஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாகவும், சமூக சேவகராக இன்னொரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒளிப்படங்கள் மூலம் கூறப்படுகின்றது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இத்திரைப்படம் மும்பையை கதைக்களமாகக் கொண்டது என்பது இரசிகர்களிடையே மேலும்  எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...