Main Menu

தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து அண்ணாமலை பேச்சு

நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பா.ஜ.வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இன்று பல தலைவர்களுடன் சந்திப்பை நடத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் ருவான் விஜயவர்தனவுடன் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த பாடுபடுவோம் என்றும் அண்ணாமலை இங்கு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடினார். இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டார்.

இதேவேளைஇலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...