Main Menu

தமிழகத்தில் புதிதாக 2,516 பேருக்கு கொரோனா – உயிரிழப்பு 800 ஐ தாண்டியது

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 2,516 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் பற்றிய சமீபத்திய தகவல்களை மாநில சுகாதாரத் துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 2,516 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இதில் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 38 பேர் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 64 ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,380 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 25 ஆயிரம் 148 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்றும் இதுவரை மொத்தம் 9 இலட்சத்து 44 ஆயிரத்து 352 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 833 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், இன்று ஒரேநாளில் 1,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் இதுவரை 35,339 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் 28,428 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளனர் என்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது.

பகிரவும்...