Main Menu

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்

தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இதன்படி இன்றுமுதல் அரச அலுவலகங்கள் 30 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மளிகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 விழுக்காடு டோக்கன்கள் வழங்கப்பட்டடு செயற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாடகை வாகனங்கள், டாக்சி, ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...