Main Menu

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஐந்து இலட்சத்தை நெருங்கியது!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 519 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 91ஆயிரத்து 571ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று (வெள்ளிக்கிழமை) 77 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் எட்டாயிரத்து 231ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 987 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் மொத்தமாக ஒரு இலட்சத்து 46ஆயிரத்து 593பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழகம் முழுவதும் ஆறாயிரத்து ஆறு பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 35 ஆயிரத்து 422 ஆக அதிகரித்துள்ளது.

பகிரவும்...