Main Menu

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக மூன்றரை இலட்சம் பேர் கைது- வாகனங்கள் பறிமுதல்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முகமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறியதாக இதுவரை 3 இலட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கை மீறி அநாவசியமாக வெளியே உலவித் திரிபவர்கள் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வரை 144 தடையை மீறியது தொடர்பாக 3 இலட்சத்து 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடக், 3 இலட்சத்து 34 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், 2.84 இலட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து இதுவதை 3.33 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...