Main Menu

தடுப்பூசியின் முதல் அளவை பெற்றவர்களுக்கு கொவிட்-19 பரவல் அபாயம் குறைகிறது!

அஸ்ட்ராஸெனா மற்றும் ஃபைஸர்- பயோன்டெக் ஆகிய தடுப்பூசிகளின் முதல் அளவை பெற்றவர்களுக்கு கொரோனா பரவல் அபாயம் 38 முதல் 49 சதவீதம் குறைவதாக இங்கிலாந்து பொது சுகாதார துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேபோல, தடுப்பூசி செலுத்திய 14 நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கிறது. அதில் வயது வித்தியாசமில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கின்றன.

தடுப்பூசி ஒரு அளவு போட்டாலே வீடுகளில் 50 சதவீதம் தொற்று பரவல் குறைவது உறுதியாகி இருக்கிறது.

தடுப்பூசிதான் நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் காக்கிறது என்பதற்கு இது சான்றாகிறது என இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, தேசிய சுகாதார சேவையால் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படும்போது மக்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய கண்டுபிடிப்பு, ஊக்கமளிப்பதாக இருந்தாலும், தொற்றைத் தவிர்க்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளான கை சுகாதாரத்தைப் பேணுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பகிரவும்...