Main Menu

டுபாய் விமான விபத்தில் பிரித்தானியர்கள் உயிரிழப்பு

டுபாயில் சிறியரக விமானமொன்று விபத்திற்குள்ளானதில் மூன்று பிரித்தானியர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்ட DA42 என்ற விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியதாக ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மூன்று மைல் தெற்கில் நேற்று (வியாழக்கிழமை) இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் மூன்று பிரித்தானியர்களும், ஒரு தென்னாபிரிக்கப் பிரஜையும் உயிரிழந்துள்ளனர். குறித்த சிறியரக விமானத்தின் விமானியும், துணை விமானியும், இரு பயணிகளுமே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப்போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பகிரவும்...