Main Menu

ஜேர்மனியில் நேற்று 7,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஜேர்மனி இந்த வாரத்தில் மூன்று நாட்களில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் பதிவாகியுள்ளது.

அதன்படி வியாழக்கிழமை முதல் முறையாக 7,000 க்கும் மேற்பட்டவர்களும் நேற்று சனிக்கிழமை 7,830 புதிய நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக றொபேர்ட் கொச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய தரவின்படி, ஜேர்மனியில் இதுவரை குறைந்த தொற்று மற்றும் இறப்பு விகிதங்கள் பதிவாகியுள்ளன.

ஆனால் தற்போதைய போக்குகள் தொடர்ந்தால் ஒரு நாளைக்கு 19,200 நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும் என்று அதிபர் அங்கலா மேர்க்கெல் எச்சரித்துள்ளார்.

பகிரவும்...