Main Menu

ஜனாதிபதியின் நாட்டுக்கான உரை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி விசனம்!

நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் உரை தொடர்பாக விமர்சிக்க ஐக்கிய மக்கள் சக்தி இன்று (சனிக்கிழமை) விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.

மக்கள் எதிர்பார்த்த விதமாக ஜனாதிபதியின் உரை அமையவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

தற்போது நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி தனது உரையில் தெரிவிப்பார் என்ற மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போய்விட்டதாகவும் கூறினார்.

மேலும் போதைப்பொருள் கடத்தல், இயற்கை பேரழிவுகள் மற்றும் அரச ஊழியர்கள் குறித்து ஜனாதிபதி தவறான கருத்தை முன்வைத்திருந்ததாகவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

பகிரவும்...