Main Menu

மரண தண்டனைக் கைதியை அரசு விடுவித்துள்ளமை தொடர்பாக சிறிதரன் கருத்து

அரசியல் கைதிகள் 16 பேரின்  விடுதலை என்பது இந்த அரசின் மரணதண்டனைக் கைதி ஒருவரை விடுதலை செய்யும் வகையில் முலாம் பூசப்பட்ட விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சிவஞானம் சிறிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியல் கைதிகள் 16 பேரின் விடுதலைக்கு காரணமான அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் சிறையில் எதிர்காலத்தை தொலைத்து வாழுகின்ற ஏனைய அரசியல் கைதிகளையும்  உடனடியாக விடுதலை செய்வதற்கு இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்.

இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் விடுதலைக்காக இந்த 16 அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளமை ஒரு முலாம் பூசப்பட்ட ஒரு விடயமாக கருதப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...