Main Menu

சோமாலியாவில் கார் குண்டு தாக்குதலில் 90 பேர் உயிரிழப்பு

சோமாலியாவில் நடந்த கார்குண்டுத் தாக்குதலில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தலைநகர் மொகதிஷுவில் பரபரப்பான நேரத்தில் சோதனைச்சாவடி அருகே வேனை ஓட்டி வந்த தற்கொலைப் படை தீவிரவாதி குண்டை வெடிக்கச் செய்ததில் அங்கிருந்த ஏராளமானோர் உடல்சிதறி ரத்தவெள்ளத்தில் கிடந்தனர்.

மினி பேருந்தில் சென்ற கல்லூரி மாணவர்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர், சாலைகளில் நின்றிருந்தவர்கள் என 90 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் ரத்தம் இருப்பு இல்லாததால் உயிருக்கு போராடி வருவதாகவும், இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த 130க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் பயங்கரவாதம் இயக்கம் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...