Main Menu

சீன எல்லையில் அனைத்துவித சவால்களுக்கும் இந்திய வீரர்கள் தயார்!- இராணுவ தளபதி

சீன எல்லையில் அனைத்துவித சவால்களையும் எதிர்கொள்வதற்கு இந்திய வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.

லடாக்- லே நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவ தளபதி நரவானே மேலும் கூறியுள்ளதாவது, “சீனா உடனான எல்லை பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

எனவே, நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரர்கள், மன உறுதியுடன் உள்ளனர். எல்லா சவால்களையும் சந்திக்க அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...