Main Menu

சாம்சங்கின் மடித்து பயன்படுத்தும் திறன்பேசி – வெளியீடு ஒத்தி வைப்பு

முன்னணி திறன்பேசி தயாரிப்பாளர்களில் முதல் முறையாக மடித்து பயன்படுத்தக்கூடிய திறன்பேசியை தயாரித்த சாம்சங் நிறுவனம் அதன் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது.

மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை வர்த்தக ரீதியாக வெளியிடுவதற்கு முன்னதாக அவற்றை விமர்சகர்களுக்கு அளித்து அவர்களது கருத்துகளை பெறுவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு விமர்சகர்களுக்கு வழங்கப்பட்ட சாம்சங் கேலக்சி ஃபோல்ட் திறன்பேசிகள் பிளவுறுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், விமர்சகர்களின் கருத்துகளை ஆராய்ந்து அதுகுறித்த மேலதிக பரிசோதனைகளை செய்ய வேண்டியுள்ளதால், கேலக்சி ஃபோல்ட் திறன்பேசியின் வர்த்தக ரீதியிலான வெளியீட்டை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக சாம்சங் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

1980 டாலர்கள் விலையை கொண்ட இந்த வகை திறன்பேசி வரும் ஏப்ரல் 26ஆம் தேதி அமெரிக்காவிலும், மே 3ஆம் தேதி பிரிட்டனிலும் வெளியிடப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

பகிரவும்...