Main Menu

சிறைச்சாலைகளில் குழந்தைகளுக்கான பாடசாலை

பிரான்சில் முதன் முறையாக சிறைச்சாலைகளில் குழந்தைகளுக்கான பாடசாலை ஒன்று திறக்கப்படவுள்ளது.

பரிஸின் Fleury-Mérogis சிறைச்சாலையில் இருக்கும் பெண் கைதிகளின் குழந்தைகளுக்காக இந்த பாடசாலை திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

பெண் கைதிகளின் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த பாடசாலை அமைக்கப்படவுள்ளது.

பாடசாலை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:30 மணியில் இருந்து மாலை 5 மணிவரை திறந்திருக்கும் எனவும், இதற்கு கட்டணமாக குழந்தை ஒன்றுக்கு மாதம் €10 யூரோக்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...