Main Menu

சர்வதேச மகளிர் தின விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி சிறப்பித்துள்ளார்.

டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விருது வழங்கும் விழா இடம்பெற்றது.

இந்தியாவில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை செய்த பெண்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்காக போராடிய தன்னார்வ அமைப்புகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பாக “நாரி சக்தி புரஸ்கார்” விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்தவகையில் இந்திய விமானப்படையில் முதன்முதலாக போர் விமானங்களை இயக்கிய பெண் விமானிகளான மோஹனா ஜிட்டர்வால்,  அவானி சதுர்வேதி,  பாவனா காந்த்,  பீகார் மாநிலத்தில் கிராமப்புற பெண்களிடையே காளான் வளர்ப்பு தொழிலை பிரபலப்படுத்தி அவர்களின் பொருளாதாரம் மேம்பாடு எய்திட வழிவகுத்த பினா தேவி மற்றும் 103 வயது மூதாட்டி மான் கவுர் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...