Main Menu

கோவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து பரிசீலனை :WHO அறிவிப்பு!

அவசரகால பயன்பாட்டிற்கு கோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தனது இணைய பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன், பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவேக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும் இந்த தடுப்பூசியின் உலகலாவிய பயன்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புதல் வழங்க வேண்டும். இதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் விண்ணப்பித்துள்ளது.

இந்நிலையிலேயே இது குறித்த பரிசீலனைகள் இடம்பெற்று வருவதாகவும், அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்குவது தொடர்பான திகதி இனிதான் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பகிரவும்...