Main Menu

கொவிட்-19 தொற்றினால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு இம்ரான் கான் நன்றி தெரிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியமைக்கு இலங்கை அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் இம்ரான் கான், தனது ருவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இம்ரான் கான், இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டபோது, இலங்கை ஜனாதிபதி மற்றும் அரச அதிகாரிகளுடன் எதிர்காலத்தில் இருநாடுகளும் நல்லுறவுடன் பயணிப்பது தொடர்பான அனுகுமுறைகள் குறித்தும் விவாதித்துள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் இவ்விடயம் தொடர்பாக தனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியதன் ஊடாக பரஸ்பர புரிந்துணர்வு மேலும் வலுவடைவதற்கு இந்த விடயம் ஏற்புடையதாக அமைந்துள்ளது.

அந்தவகையில் இவ்விடயத்துத்துக்கு இலங்கையின் தலைமைக்கு இபாகிஸ்தான் நன்றி தெரிவிக்கிறது’ என ருவிட் செய்துள்ளார்.

பகிரவும்...