கொவிட்-19 எதிரொலி: ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்பானியர்கள் வேலை இழப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய் காரணமாக, ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்பானியர்களின் வேலையை இழந்துள்ளனர்.
முடக்கநிலை வேலை தேடுவதைத் தடுக்கும் நிலையில், அவர்கள் வேலையின்மை எண்ணிக்கையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய புள்ளிவிபர நிறுவனம் (ஐ.என்.இ) வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள், ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வேலையற்றோர் எண்ணிக்கை 55,000 மட்டுமே அதிகரித்து 3.4 மில்லியனாக இருந்தது.
இது வேலையின்மை வீதத்தை முதல் காலாண்டில் 14.4 சதவீதத்திலிருந்து 15.3 சதவீதமாக உயர்த்தியது.