Main Menu

கொலை செய்துவிட்டு சடலத்துடன் பொலிஸ்நிலையம் சென்று அதிர்ச்சியளித்த நபர்!

கொலை செய்துவிட்டு சடலத்துடன் நபர் ஒருவர் பொலிஸ்நிலையத்திற்கு சென்று அங்கிருந்த பொலிஸாரை அச்சப்பட வைத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

கலிபோர்னியாவின் வடபகுதியில் உள்ள காவல்துறை அலுவலகத்தில்  பணிபுரிந்த காவல்துறையினர் இந்த அனுபவத்தை சந்தித்துள்ளனர்.

நபர் ஒருவர் பொலிஸ்நிலையத்திற்குள் நுழைந்து தான் பலரை கொலை செய்துள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் சடலம் காரில் இருப்பதாகவும் தெரிவித்தவேளை முதலில் அதனை நாங்கள் நம்பவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் பொலிஸ்நிலையத்திலிருந்து 200 மைல் தொலைவில் உள்ள தனது வீட்டில் இந்த கொலைகளை புரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட நபரின் காரை  சோதனையிட்டவேளை நபர் ஒருவரின் சடலம் காணப்பட்டது, அதன் பின்னர் அவரது வீட்டில் மேலும்  சடலங்களை கண்டுபிடித்தோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர் எங்கள் அலுவலகத்திற்கு நுழைந்து அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் நான்  கொலை செய்துள்ளேன் அது குறித்து தெரிவிக்கவே இங்கு வந்தேன் என குறிப்பிட்டார் என காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனது வாழ்வில் எவரும் இதுவரை நான் கொலை செய்துவிட்டு சடலத்துடன் வந்துள்ளேன் என தெரிவித்ததில்லை இது வழமைக்கு மாறான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மிகவும் அமைதியானவராக காணப்பட்டார் என தெரிவித்துள்ள காவல்துறையினர் ஏன் அந்த கொலைகளை செய்தார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...