Main Menu

கொலம்பியாவில் பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு!

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சன்ரான்டர் நகரில் பொலிஸ் நிலையம் அருகே வாகனம் ஒன்றிலேயே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்காக நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இக்குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதி கொலம்பியாவில் கடத்தல் தொழில்கள் நடைபெறும் முக்கிய பகுதி என கொலம்பியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலம்பியாவில் அரசுக்கு எதிராக கடந்த சில நாட்களாக தீவிரமான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தக் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிரான கைது நடவடிக்கையை எதிர்த்து இளைஞர்களும் பொது மக்களும் கொலம்பியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு கடந்த வியாழக்கிழமை சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் நேற்றும் கொலம்பியாவின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...