கொரோனா வைரஸ்: பிரித்தானியாவில் மேலும் 33 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் காரணமாக பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக இதுவரை பிரித்தானியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை பிரித்தானியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளார்களின் எண்ணிக்கை 2626 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 676 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.